பொம்மலாட்டம் ~ வங்க நாவல்

 பொம்மலாட்டம் ~ வங்க நாவல்

மாணிக் பந்தோபாத்யாய


புதுல் நாச்சேர் இதிகதா என்ற வங்கநாவலின் தமிழாக்கம் பொம்மலாட்டம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பத்தாண்டுகள் நாவலின் காலம். சுதந்திரத்திற்கு முன்பான வங்கக் கிராமமான காவுதியா என்ற ஊரின் கதை.

ஆங்கில மருத்துவம் பயின்று தன் கிராமத்தில் மருத்துவம் பார்க்கத் தொடங்கும் சசி என்ற இளைஞன் மையக் கதாபாத்திரம். படித்து முடித்தவுடன் இளைஞர்களுக்கு இருக்கும் உத்வேகம் மிக்க லட்சியக் கனவுகளும், நேர் வாழ்க்கை அதனுடன் முரண் நிற்கும் களமாக மாறுகிறது. நடைமுறை வாழ்வில் நுழையும் சசியின் அடுத்த பத்தாண்டுகளில் நடக்கும் மாற்றங்கள், அவனுடன் தொடர்புடைய குடும்பங்களின் அமைப்பு, தனிமனிர்கள், அவர்களின் வாழ்க்கை முறை என்று நாவல் விரிகிறது. 

பொம்மலாட்டம் படத்தினைச் சொடுக்கி நாவலைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.  

குறிப்பு: உரிமை கோரல் எழும்பொழுது, உடனடியாக நாவல் இத்தளத்திலிருந்து நீக்கப்படும்.

நன்றி -  சாஹித்ய அகாதெமி, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி நூலகம் மற்றும் நூலினை  PDF வடிவில் மாற்றித் தந்த நண்பர், வாசகர் ஹரிஷ் அவர்களுக்கு.


~ விக்ரம், ஆசிரியர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கருவளையும் கையும் (கு.ப.ராஜகோபாலன் கவிதைகள்)

சின்னஞ்சிறு நூல் வரிசை -1 - சபார்டி ஜோகோ தமோனோ